வியாழன், 3 ஏப்ரல், 2025

தமிழர் பகுதியில் இராணுவக் குவிப்பு தொடர்வதன் மர்மம். மு.திருநாவுக்கரசு நேர்காணல் | ஊடறுப்பு (Udaruppu)

 

அரசுகளுக்கு எந்தவித தர்ம சிந்தனையோ, இரக்கமோ, நேர்மையோ கிடையாது. அவை எந்த தத்துவத்தை பின்பற்றி சென்றாலும் தங்கள் சுயநலனுக்காகவே முடிவுகள் எடுக்கின்றன. செயல்படுகின்றன.

கொரோனா காலத்திற்கு பின்பு , உக்ரைன் போர் வெளிக்காட்டுவது என்னவென்றால், உலகமானது அமெரிக்காவை மையம் கொண்ட ஒற்றை மைய அரசியல் போக்கிலிருந்து விலகி, பல்வேறு மையங்கள் கொண்ட புதிய அரசியல் சூழலை நோக்கிப் போகிறது.



சனி, 29 மார்ச், 2025

முள்ளிவாய்க்கால் அழிவின் பின் சீனாவின் மூன்று முக்கிய நகர்வுகள். காணொலி. I ஊடறுப்பு (Udaruppu)

 

மகிந்தவுக்காக களத்தில் இறங்கிய சீனா.
மு.திருநாவுக்கரசு அவர்கள் நேர்காணல்.
ஊடறுப்பு தள நேர்காணல் காணொலி,


மேலேயுள்ள காணொலி உரையில் கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள் கீழே:

சீனாவின் வளர்ச்சியால் இதுநாள் வரை அமெரிக்காவை தலையாகக் கொண்ட ஒற்றை மைய அரசு இப்போது மீண்டும் இரட்டை மைய அரசாக பரிணமிக்க ஆரம்பித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றாலும் பெரும் அழிவுகளையும் சந்தித்த உலகப் பேரரசுகள், அதன் பின்பு இனி எந்தப் போர் நடந்தாலும் தங்கள் நாடுகளில் நடக்காமல், தாங்கள் பாதிக்கப்படாமல், பிற நாடுகளிலும் பிற கண்டங்களிலும் நடத்திக் கொள்வது என்கிற முடிவை எடுத்தன.

அப்படி நடத்தப்பட்ட ஒரு போர் உக்ரைன் போர். பலவீனமடைந்துவிட்ட ரஷ்யாவை உக்ரைன் போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை அழித்துவிட முடியும் என்று நினைத்த அமெரிக்காவிற்கும் அதன் ராணுவச் செயலகம் பென்டகனிற்கும் இந்த முன்னெடுப்பு பெரும் தோல்வியைக் கொடுத்திருக்கிறது.

அதிகம் பார்க்கப்பட்டவை: