ரணில் - மோடி 2023 வரலாற்று ஒப்பந்தம் தகர்ப்பு. ஏன் ? மு.திருநாவுக்கரசு அவர்களின் நேர்காணல். 07.02.2026.
ஊடறுப்பு செய்தித் தளத்திற்காக வரலாற்றறிவியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் லங்காஸ்ரீ ஊடகவியலாளர் தமிழரசு அவர்களுக்கு வழங்கிய இணைய நேர்காணல். 07.02.2026.
பொருளாதார தொலைநோக்கு: நீண்ட காலப் பொருளாதாரக் கூட்டாண்மை, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- எரிசக்தி இணைப்பு: இரு நாடுகளின் மின்சாரக் கட்டமைப்பு (Electricity Grid) மற்றும் திருகோணமலை எரிசக்தி மையத்தை மேம்படுத்துதல்.
- நிலப் பாலம் (Land Bridge): இந்தியா மற்றும் இலங்கையை இணைக்கும் நிலப் பாதையை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒப்புதல்.
- டிஜிட்டல் மற்றும் வர்த்தக பரிவர்த்தனை: இந்திய ரூபாய் (INR) மூலம் வர்த்தகம் மற்றும் UPI அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயல்படுத்துதல்.
- எரிபொருள் குழாய்: இலங்கைக்கு எரிபொருள் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் feasibility study.
- பாதுகாப்பு மற்றும் இணைப்பு: கடல்சார், வான்வழி மற்றும் துறைமுக இணைப்பு (திருகோணமலை, கொழும்பு) மூலம் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல்.
இந்த ஒப்பந்தத்தி்ல் வழக்கமான இரு நாடுகளிடையேயான பொருளாதார, தொழில் அபிவிருத்தி போன்றவை பேசப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானது இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கை மன்னாருக்குமிடையே கடல் மேல் ஒரு தரைவழிப் போக்குவரத்து பாலம் அமைப்பது என்பதாகும். இந்தப் பாலத்தின் நீளம் கடல்வழியே வெறும் 23 கி.மீ நீளமேயாகும்.
சாத்தியமில்லை என்பதை வரலாற்று அரசியல் நிகழ்வுகளின் ,பின்னணிகளின் ஊடே விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
இருப்பதிலிருந்து மாற்றி இந்தியாவின் ஒரு இணைப்புப் பகுதியாக மாறுவதை நோக்கி
கொண்டு செல்லும் என்றும், ஈழத் தமிழர்கள் இலங்கையில் சிங்களர்களை விடவும் அதிகாரம்
பெறுவார்கள் என்றும் சிங்களர்கள் உள்ளூர அச்சப்படுகிறார்கள். தமிழர்கள் இலங்கையின் வடபகுதியிலும்
இந்தியாவின் தென்முனையிலும் வாழ்வதால் ஈழத் தமிழர் மீதான, இந்தியா மீதான
அச்சம் சிங்களருக்கு வரலாற்று ரீதியாக மகாவம்ச காலத்தில் இருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தியாவின் வரலாற்று மனோபாவமும் இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள
ஒரு சிறு தீவு என்றே கருதி வந்திருக்கிறது. சிந்து நதியில் ஆரம்பித்து இலங்கை வரை இந்தியாவின்
நீட்சி என்ற கருத்திலேயே சிங்களத்தீவிற்கொரு பாலம் அமைப்போம்என்று பாரதியாரே பாடியிருப்பதில் இருந்து இதை உணரலாம்.
அறிக்கைகளின்படி, ராமேஸ்வரத்தையும் (இந்தியா) தலைமன்னாரையும் (இலங்கை) இணைக்கும்
முன்மொழியப்பட்ட சாலை மற்றும் ரயில் பாலத் திட்டத்திற்கு தோராயமாக 5 பில்லியன் டாலர்
(சுமார் ₹24,000 கோடி முதல் ₹40,000 கோடிக்கும் மேல்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இத்திட்டங்களுக்கு நிதியளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தாலும்,
இந்தத் திட்டம் நிதி உதவிக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டின் முந்தைய
அறிக்கைகள், ஆசிய வளர்ச்சி வங்கி 3.5 பில்லியன் டாலர் (₹220 பில்லியன்) நிதியுதவி அளிப்பதாக
உறுதியளித்திருந்ததாகத் தெரிவித்தன.
இந்தியாவை கைகழுவி தோல்வியுறச் செய்த இலங்கை சிங்கள அரசுகள் இந்த இணைப்புப்
பாலத்தை ஒருபோதும் நிறைவேற்றாது. ஒருவேளை இலங்கையில் தமிழர்கள் பகுதிகள்
முழுவதும் சிங்களமயமாக்கப்பட்டு தமிழர்கள் தடயமின்றி அங்கே அழிக்கப்பட்டால்
அது நிரந்தரமாக சாத்தியப்படாமலே போய்விடும். தனித்த சிங்கள நாடு என்கிற தாங்கள்
உருவாக்கிவரும் அடையாளத்தை பேணவே சிங்களர் விரும்புவர். அப்படிப்பட்ட சிங்கள இனமயமாக்கல்
மூலம் தமிழரை அழிப்பது தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில்
நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை தமிழீழம் அமைந்தால் அது தமிழீழத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான
பாலமாகத் தான் அமைய முடியுமே தவிர சிங்கள இனவாத இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடையே இப்படி ஒரு பாலம் அமையவே முடியாது.
இலங்கை அரசுகளின் இந்த இந்திய எதிர்ப்பு வாதத்தை தெளிவாக விவரிக்கிறார்
இந்த காணொளியில்.









