ராவணன் சிங்களவனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராவணன் சிங்களவனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 மார்ச், 2025

ராவணனை உரிமை கொண்டாடும் சிங்களவர்கள். தடம் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி.

 

தடம் செய்தி ஊடகத்தின் வரலாறு பற்றிய செய்தித் தொகுப்பில், இலங்கையின் வரலாறு பற்றிய விவாதத்தில் மு.திருநாவுக்கரசு அவர்கள் மகாவம்ச நூல் தமிழர்களுக்கு எவ்வளவு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கிறது என்பதையும் அது சிங்களர்களை இப்போதும் வழிநடத்தும் ஒரு நூல் என்பதையும் விளக்குகிறார்.

அதன் தொடர்ச்சியாக ராவணன் என்கிற இந்து இதிகாசங்களின் கதாபாத்திரத்தை சிங்களராக சித்தரிப்பதையும் பற்றி கூறுகிறார்.

பாக் நீரிணைப்பின் வழியில் உள்ள கண்டத்திட்டு தான் ராமர் பாலம் என்று இதிகாசங்களில் கூறப்படுகிறது. ராமர் கதை என்பது நிஜமாக நடந்த ஒன்றாக இல்லாவிட்டாலும், ராமாயண கதையில் வரும் இலங்கை என்பது இலங்கைத் தீவு என்று கொண்டால் அது காலம் காலமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு படையெடுப்புகள் நடந்து ஆட்சிக் கைப்பற்றல்கள் நடந்து வருகின்றன என்பதை குறிக்கும் ஒரு குறிப்பு எனலாம்.

சிங்களர்களுக்கு காலம் காலமாக வரலாற்று ரீதியாகவே இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்து தங்களை ஆக்கிரமிப்பார்கள் என்கிற வரலாற்று அச்சம் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்போதும் கூட அது உண்மையாகவே இருக்கிறது.

தடம் செய்தி பேட்டியின் காணொலி. யூட்யூப் தள இணைப்பு.



அதிகம் பார்க்கப்பட்டவை: