லங்கா ஸ்ரீ பத்திரிக்கையின் ஊடறுப்பு நிகழ்வில், ஈழத்தைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் திரு மு.திருநாவுக்கரசு அவர்கள், நெறியாளர் தமிழரசுவுக்கு, 31-01-2026 அன்று வழங்கிய நேர்காணல்.
லங்கா ஸ்ரீ இணையதள நேர்காணலின் முதல் பகுதி:
இந்த நேர்காணல்களில் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள் சில சுருக்கமாக கீழே...
- இந்த 2026ல் உலக ஒழுங்கு குலைந்திருக்கிறது. ஆனால் புதிய உலக ஒழுங்கு இன்னும் உருவாகவில்லை.
- America First என்கிற அமெரிக்காவின் தன்னை முன்னிலைப்படுத்தும் கருதுகோள் சிக்கலுக்கு உள்ளாகிறது.
- இந்த சீர்குலையும் உலக ஒழுங்கு சூழலில், இரு பெரும் நாடுகள் அல்லது நாட்டு அணிகளுக்கு இடையிலான பெரும்போர் தான் புதிய உலக ஒழுங்கை உருவாக்கக் கூடிய பலத்தை அப்போரில் வெற்றி பெறும் நாட்டிற்கு அல்லது வெற்றி பெறும் அணிக்கு வழங்கும். ஆனால் இத்தகைய சூழல் நடக்காததால் உலக ஒழுங்கை அமெரிக்காவால் மாற்ற முடியாது.
- சீர்குலையும் உலக ஒழுங்கில் சந்தைக்கான போட்டியில் அமெரிக்காவிற்கு சவாலாக இருப்பது சீனாவே. அமெரிக்கா ஏகாதிபத்தியம் கம்பெனிகளின் monoploy ஆக இருக்கிறது. சீனா அரசு சார்ந்த(state sponsored), சந்தை ஏகாதிபத்தியமாக, monoopoly ஆக இருக்கிறது. எனவே சீனாவின் பலம் அதிகமாக இருக்கும்.
- சீனா கடந்த 25 ஆணடுகளாக தொழில்நுட்பத்தை மேற்குலகிடமிருந்து பெற்றுக் கொள்ள தனது சந்தையை திறந்து விட்டது சீனா மற்றும் ரஷ்யா. சீனா உலக தொழில்நுட்பம் அனைத்தையும் பெற்று இன்று மிதமிஞ்சிய வளர்ச்சியடைந்து விட்டது.
- 45 வருட தொழில்நுட்பமயமாக்கப்பட்ட உற்பத்தியால், மாசுபடுத்தப்பட்ட சுற்றுப்புறச் சூழலால் ஆர்க்டிக் கடல் உருகுகிறது. அது புதிய எளிதான கடல்வழிப்பாதையை உலக வர்த்தகத்திற்கு ஏற்படுத்துகிறது. இதைப் பயன்படுத்தி சீனா தனது உற்பத்திப் பொருட்களை மேற்குலகம், கனடா மற்றும் உலகநாடுகள் அனைத்திற்கும் கொண்டு செல்வது இன்னும் எளிதாகிறது. எனவே தான் இந்தப் பாதையில் இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முயல்கிறது. சீனாவின் எளிய கடல்வழிப் பாதையை தனது கட்டுக்குள் வைக்க முயல்கிறது.
- முதலாம் , இரண்டாம் உலகப் போர்கள் முதலாளிகளுக்கும், தொழிலாளி வர்க்கத்திற்கும் இடையேயான போர்கள் அல்ல. வளர்ச்சியடைந்த முதலாளிகளிடையே நடந்த பன்னாட்டு சந்தைப் பிடிப்பின் போட்டியால் நடந்த போர்களே ஆகும். முதலாளி வர்க்கம் என்கிற ஒரே வர்க்கத்துக்குள்ளேயே நடந்த முரண்களே இந்தப் போர்கள் ஆகும்.
- அமெரிக்கா ஈரானுடன் நேரடியாக போரில் இறங்கும் வாய்ப்பு குறைவு. ஈரான் மேல தாக்குதல்கள் செய்யலாம். தலைவர்களை கொல்லலாம். உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். ஆனால் நேரடியாக போரில் இறங்குவது சரியான அமெரிக்காவின் முடிவல்ல. தேவையுமல்ல.
- இன்றைய உலக ஏகாதிபத்திய சந்தைப் போட்டியில் கிரீன்லாந்து, வெனிசூலா மற்றும் இலங்கை ஆகிய போட்டிக்கான குவிமையங்கள் உள்ளன.
- தந்தை செல்வா காலம் முதலே தமிழர்கள் சுயாட்சி என்பதை அடைய முடியாமலே சிங்கள ஆளும் வர்க்கத்திடம் தொடர்ந்து தோல்வியடைந்தே வந்துள்ளனர். ஒரு தலைவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியலை வெற்றிகரமாக புரிந்து உலக அரசியலை செய்ததில்லை.
- பாக் நீரிணை தமிழரின் கட்டுப்பாட்டில் இருந்தவரை ஈழப் போராட்டம் வென்றது. பாக் நீரிணை தமிழரை விட்டுப் போனபின்பு ஈழப் போராட்டம் எளிதில் அழிக்கப்பட்டது.
- இந்திராகாந்தி காலத்தில் 1984ல் இந்திரா-பார்த்தசாரதி தீர்வு ஒன்று திட்டமிடப்பட்டது. கிரேக்க-துருக்கி தீர்வு போல, ஒரு நாடு - இரு அரசுகள் என்கிற அமைப்பை உருவாக்க தமிழர் பகுதியில் படையை இறக்கி இந்தியப் படை தமிழர் பகுதியை ஆளும் என்றும், சிங்களர் பகுதியை சிங்களர் ஆளட்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அது நிறைவேற்றப்படுவதற்குள் இந்திராகாந்தி கொல்லப்பட்டார்.
மேலேயுள்ள இரண்டு பாகங்களின் தொகுப்பு :
உலக ஒழுங்கு சீர்குலையும் காலத்தில் வல்லரசுகளின் புதிய ஆதிக்க குவிமையங்கள். நேர்காணல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக