புதன், 23 ஜூலை, 2025

இலங்கையில் மீண்டும் இனப்படுகொலை நடக்கும். - மு.திருநாவுக்கரசு அவர்களுடன் நேர்காணல்.

 


தடம் இணைய இதழுக்கு மு.திருநாவுக்கரசு அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலானது, 5 காணொலி பாகங்களாக யூட்யூப் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொலிகளின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

இலங்கையில் சிங்களர், இலங்கை பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து 1948ல் விடுதலை அடைவதற்கு முன்பும் கூட  தமிழரை தங்கள் இனத்தின் எதிரிகளாகவே கருதிவந்தார்கள் என்பதற்கு வரலாற்று சம்பவங்கள் நிறையவே உண்டு.


1948ல் பெரும்பான்மையான பலத்துடன் இலங்கையின் அரசை கைப்பற்றியதிலிருந்து திட்டமிட்ட வகையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளனர் சிங்களர்.

1980களில் ஆயுதப் போராட்டம் தமிழரால் சிங்களர் சித்திரவதைக் கொடுமைகளை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டது. 1983 ல் யாழ் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு ராணுவ வேனை விடுதலைப் புலிகள் கண்ணி வெடி வைத்து தகர்த்ததில் அதில் பயணம் செய்த 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை கொழும்பில் வைத்து தகனம் செய்ய சிங்கள அரசு முயல, ஆனால் சிங்கள இனவெறியாளர்கள் அந்த வீரர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி அங்கே அவ்வுடல்களை வைத்து பெரும் ஊர்வலங்கள் நடத்தி தமிழர் மீதான வெறுப்புணர்வில் நெய் ஊற்றினர்.

இதைச் சாக்காகக் கொண்டு தமிழரைக் கொல்ல சிங்கள அரசு அதிகாரத்திலிருந்தவர்கள் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில், ஜூலை 23 முதல் ஜூலை 30 வரை சிங்களரால் சிங்கள அரசின் ஆதரவோடு, சாதாரண பொதுமக்களான ஈழத்தமிழரை கும்பல் கும்பலாக சேர்ந்து சிங்கள இனவெறியர்கள் அடித்து, எரித்து, பாலியல் வன்புணர்வு செய்து, தீயில் தூக்கிப் போட்டு , இப்படி பலவாறாக கொலை செய்தார்கள். 


தமி்ழ் மக்களின் வீடுகளில் ராணுவம் மற்றும் போலீஸ் உதவியுடன் புகுந்த 

சிங்களர்கள் தமிழரை சித்திரவதை செய்து கொன்றதுடன் அவர்கள் வீட்டிலிருந்த அனைத்து உடைமைகளையும் கொள்ளையடித்து அல்லது அழித்துச் சென்றார்கள்.


இலங்கை வெலிக்கடை சிறையிலும் இந்தப் படுகொலையை ஒட்டி ஏற்கனவே சிறைத் தண்டனையில் வைக்கப்பட்டிருந்த புளோட் ஆயுதப் போராட்டக் குழுவின் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மூன்று பேரையும், அவர்களையும் சேர்த்து மொத்தம் 35 தமிழர்களை , சிறைக்குள்ளேயே சிங்கள இனவெறியர்கள் சிறைத்துறையின் அனுமதியோடு, சித்திரவதை செய்து கொன்றனர்.


1983 யூலைக் கலவரத்தினால் 3000 பேர்வரை, தமிழர்கள் குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை என அனைத்து வயதுகளிலும் கொல்லப்பட்டனர், பத்துலட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்று முகாம்களில் அடைக்கப்பட்டனர். 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை என்பதாக சிங்கள அரசு இதைத் திட்டமிட்டு செய்து முடித்தது. இது திட்டமிட்ட செயல்தான் என்பதற்கு எண்ணற்றோர் சாட்சிகளாக உள்ளனர், திரு மு.திருநாவுக்கரசு அவர்களும் அப்படி ஒரு சாட்சியாக நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை உரைக்கிறார்.

நடத்தப்பட்ட யூலைக் கலவரம், படுகொலைகள் சம்பந்தமாக, தனது அனுபவங்களையும், அப்போதைய சிங்களரின் இன அழிப்பு அரசியலையும் பற்றி இந்தக் காணொலியில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளரும் , வரலாற்று ஆசானுமாகிய திரு மு.திருநாவுக்கரசு அவர்கள்.


தடம் இணையத்துக்கு வழங்கிய பேட்டியின் காணொலி. 

காணொலி பாகம் 1. 
கருப்பு ஜூலை புகைப்படம் வெளிவந்தது எப்படி? | Welikada Prison Massacre




காணொலி பாகம் 2 
மகாவம்சம் சொல்வது ; தமிழர்கள் மிருகத்தைவிட கேவலமானவர்கள் | Tamil Tigers peace Talks



இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர் தீக்சித் அவர்களின் கூற்றுப்படி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முறித்தது சிங்கள அரசே. விடுதலைப் புலிகள் அல்ல. 
கீழ்க்காணும் Assignment Colombo என்கிற புத்தகத்தின் பக்கங்களில் அவர் தந்த அறிக்கையை படிக்கலாம்.

 




காணொலி பாகம் 3 
இலங்கையின் ஜனாதிபதியும் இடதுசாரித் தலைவருமான அநுரகுமார திசநாயகே ஏன் இதுவரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு வருந்தி ஒரு மலர்வளையும் கூட வைத்ததில்லை ? 



இலங்கை இரண்டாக கண்டிப்பாக உடையும். தமிழருக்கான ஒரு தனி நாடு உருவாகியே தீரும். அப்போது ஜே.வி.பி மீண்டும் ஒரு இன அழிப்பை முன்னெடுக்கும். குறைந்தது இரண்டு லட்சம் பேர் கொல்லப்படுவார்கள். ஆனால் இலங்கை பிரிவதைத் தடுக்க இயலாது.

காசா படுகொலைகளையும், உலகெங்கும் உள்ள இனப்படுகொலைகளையும் ஆண்டுதோறும் இன்றும் நினைவு கூறும் தமிழ்நாட்டு இடதுசாரிகள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை ஏன் ஒரு முறை கூட நினைவு கூரவில்லை ? கம்யூனிசம் என்கிற தத்துவத்திற்கே இது இழுக்கு இல்லையா. 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அதிகம் பார்க்கப்பட்டவை: