சனி, 29 மார்ச், 2025

முள்ளிவாய்க்கால் அழிவின் பின் சீனாவின் மூன்று முக்கிய நகர்வுகள். காணொலி. I ஊடறுப்பு (Udaruppu)

 

மகிந்தவுக்காக களத்தில் இறங்கிய சீனா.
மு.திருநாவுக்கரசு அவர்கள் நேர்காணல்.
ஊடறுப்பு தள நேர்காணல் காணொலி,


மேலேயுள்ள காணொலி உரையில் கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள் கீழே:

சீனாவின் வளர்ச்சியால் இதுநாள் வரை அமெரிக்காவை தலையாகக் கொண்ட ஒற்றை மைய அரசு இப்போது மீண்டும் இரட்டை மைய அரசாக பரிணமிக்க ஆரம்பித்துள்ளது.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றாலும் பெரும் அழிவுகளையும் சந்தித்த உலகப் பேரரசுகள், அதன் பின்பு இனி எந்தப் போர் நடந்தாலும் தங்கள் நாடுகளில் நடக்காமல், தாங்கள் பாதிக்கப்படாமல், பிற நாடுகளிலும் பிற கண்டங்களிலும் நடத்திக் கொள்வது என்கிற முடிவை எடுத்தன.

அப்படி நடத்தப்பட்ட ஒரு போர் உக்ரைன் போர். பலவீனமடைந்துவிட்ட ரஷ்யாவை உக்ரைன் போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை அழித்துவிட முடியும் என்று நினைத்த அமெரிக்காவிற்கும் அதன் ராணுவச் செயலகம் பென்டகனிற்கும் இந்த முன்னெடுப்பு பெரும் தோல்வியைக் கொடுத்திருக்கிறது.

புதன், 19 மார்ச், 2025

2009ல் தமிழ்த் தேசிய தலைவர் தன் குடும்பத்துடன், உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி. - மு.திருநாவுக்கரசு.

 

அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு அவர்கள் லங்கா ஸ்ரீ ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்வில் வழங்கி வரும் தொடர் நேர்காணல். 

இந்த நேர்காணலில் 2009ல் தமிழ்த் தேசிய தலைவர் தன் குடும்பத்துடன், உலகிற்கு வழங்கிய வரலாற்றுச் செய்தி பற்றி விளக்குகிறார். 


ஊடறுப்பு நிகழ்வு நேர்காணல் காணொலி யூட்யூப் இணைப்பு.





அதிகம் பார்க்கப்பட்டவை: