நாள்: 09.02.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : இரவு 8.00 மணி (இலங்கை நேரம்)
அறகலய அரசியல் : தோற்றமும் மாற்றமும் (ஈழப் போராட்டம் முதல் ஜேவிபி வரை)
திரு. மு.திருநாவுக்கரசு, "ஈழத்தமிழர் அரசியலை எவ்வாறு முன்னெடுப்பது?" எனும் தலைப்பில் நிகழ்நிலையில் (Zoom) உரையாற்றியதன் காணொலி.
இலங்கையில் 2022ல் சிங்கள மக்களால் நடத்தப்பட்ட அரகலய வெகுஜன போராட்டம், கோத்தபய ராஜபக்சேவை ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டியதுடன் ராஜபக்சே குடும்பமே அரசியலை விட்டு வெளியேறும்படி செய்தது.
ஆனால் அந்தப் போராட்டம் இலங்கைக்கு வேறு எதுவும் மாற்றங்களைக் கொண்டுவந்துவிடவில்லை. இந்த அரகலயப் போராட்டம் ஏன் தோன்றியது, அதன் விளைவுகளை வைத்து அதிகாரத்தை யார் கைப்பற்றியது போன்ற விஷயங்களை ஆய்ந்து விளக்குகிறார் மு.திருநாவுக்கரசு அவர்கள்.
இவ்வுரையில் மேலும் அவர் கூறிய கருத்துக்கள் பற்றிய குறிப்புகள் கீழே...
ஈழ யுத்தத்தை முன்னின்று நடத்திய யுத்த பிரபுக்கள் மூன்று பேர்.
சந்திரிகா குமார துங்கா, மஹிந்த ராஜபக்சா, கோத்தபய ராஜபக்ச.
அதிகார பதவிகளில் இருந்துகொண்டு, ராணுவ வாதம் பேசி, யுத்தத்தை, இறுதியில் இனப்படுகொலையைச் செய்தார்கள்.
இந்த மூன்றுபேரைத் தவிர இவர்களோடு இந்த எல்லா காலங்களிலும் இவர்களுக்கு உடந்தையாக கூட்டாக நின்றிருந்த, சிங்கள மக்களிடம் போருக்கான ஆதரவைப் பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்த ஜேவிபி நாலாவது யுத்த பிரபுவாகும்.
ஆனால் தற்போது அந்த உடந்தையை மறைத்துக் கொண்டு இப்போது மக்களிடையே ஜனநாயக முறையில் நம்பிக்கை பெற்று அதிகாரத்தை பிடித்து ஜனநாயக முகம் காட்டுகிறது.
அடிமைகளிடம் சமாதானம் பேச முடியாது. விடுதலை பெற்ற மக்களிடம் மட்டுமே சமாதானம் சமமாக பேசமுடியும். ஈழ மக்கள் தோல்வியுற்று, அடிமைப்பட்டு இன்று கிடக்கிறார்கள். அவர்களிடம் போய் அநுரா பேசும் சமாதானம், அமைதி எல்லாம் ஆதிக்க சிங்களம் தமிழர் மேல் திணிக்கும் சமாதானமே.
ஜேவிபியும் அநுராவும் கம்யூனிச முகமூடிகள் அணிந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் சிங்கள இனவாதத்தை போற்றிப் பாதுகாத்தவர்களாக, பேணி வளர்த்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.
இன்றுவரை இனப்படுகொலைக்கான ஒரு விசாரணைக் குழுவைக் கூட வைக்க பேசாமல், மக்களே அதை மறந்துவிடுங்கள் என்று நயவஞ்சகமாக அமைதி பேசும் அநுராவின் வார்த்தைகள் அதற்குச் சான்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக